spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

-

- Advertisement -

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32,000 கனஅடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும் மற்றும் பரிசல் சவாாி மேற்கொள்ளவும், இயக்கவும் தொடா்ந்து பத்தாவது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏக்கம் அடைந்துள்ளனா்.

இந்நிலையில், நேற்று முன் தினம் கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதமும், டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி வீதமும் நீர்மின் நிலையங்கள் வழியாக மாலை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. மீதமுள்ள 2 ஆயிரம் கன அடி தண்ணீர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டது. ஆனால் தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி வினாடிக்கு 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விரைவாக விசாரணை மேற்கொள்ளப்படும்  – தேர்தல் ஆணையம் உறுதி

we-r-hiring

MUST READ