சாதனை படைக்கும் காலை சிற்றுண்டி திட்டம்
நாட்டுக்கே வழிகாட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்று ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு அளிக்கும் திட்டம்.
அறிஞர் அண்ணா பிறந்த நாளை ஒட்டி கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டித் திட்டத்தை மதுரை மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் தொடங்கி வைத்தார்.
முதல் கட்டமாக 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டித் திட்டத்தின் மூலம் சுமார் ஒன்றேகால் லட்சம் மாணவர்கள் பயனடைந்தனர். இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் வருகையை 85 சதவீதம் அதிகரித்துள்ளது. காலை உணவு திட்டத்தால் மாணவர்களின் வருகைப்பதிவு மாவட்ட வாரியாக எந்த அளவுக்கு அதிகரித்தது என்பதற்கான மாவட்ட வாரியாக புள்ளி விவரங்களை கடந்த வாரம் வெளியிட்டார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
சுமார் 34 கோடி ஒதுக்கீட்டில் 1,545 பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்திய போது நல்ல பலன்களை கொடுத்திருக்கும் காலை சிற்றுண்டி திட்டம் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் விரிவு படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிக்கூடங்களில் விரிவு படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வளமான எதிர்கால தமிழ்நாட்டை உருவாக்கும் பள்ளிக்கூட மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டம் தமிழ்நாட்டில் அறிமுகமானது எப்போது? மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது மற்றும் வளர்த்தெடுக்கப்பட்டதன் பின்னணி?
சத்துணவு மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தால் தமிழ்நாடு பெற்ற பலன்கள் என்னென்ன? முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை உணவு திட்டத்தின் சிறப்புகள் என்ன? காலை சிற்றுண்டி திட்டம் மாணவர்களின் வருகையை அதிகரித்தது எப்படி? என விரிவாக விளக்குகிறது இந்த கட்டுரை.
தமிழ்நாட்டில் ஏன் இந்தியாவிலேயே பள்ளிக்கூட மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்துக்கான விதியை ஊன்றியது திராவிட இயக்கத்தின் முன்னோடியான நீதிக்கட்சி தான். குலக்கல்வி திட்டம் நடைமுறையில் இருந்த நிலையில் கல்வியை அனைத்து தரப்பு மக்களுக்குமானதாக மாற்றியது ஆங்கிலேய ஆட்சி.
அரசுக்காக அரசு நிர்வாகத்தின் கீழ் பணியாற்ற ஏராளமான ஊழியர்கள் தேவை என்பதால் அதற்கு வசதியாக கல்வியை பரவலாக்கத் தொடங்கியது ஆங்கிலேய அரசு. அந்த வாய்ப்பை பயன்படுத்தி சாதி கட்டமைப்புகளால் கல்வி பெற முடியாமல் இருந்த ஏராளமான சமூக மக்கள் கல்வி நிலையங்களை நோக்கி வரத் தொடங்கினர். ஆனால் அடித்தட்டு மக்களின் வறுமை குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்வதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. வேலைக்குச் சென்றால் தான் உணவு என்ற நிலையை ஏராளமான குடும்பங்களில் நிலையாக இருந்தது.
இந்நிலையில் பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டால் சாப்பிடுவது எப்படி என்பது முக்கிய கேள்வியாக இருந்தது. சீர்திருத்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் தேர்தல் நடத்த தொடங்கியது ஆங்கிலேய அரசு. அதன் அடிப்படையில் 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் நடைபெற்ற தேர்தலில் போட்டிட்டு வென்று சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் ஆனார் திராவிட இயக்கத்தின் தாய் கட்சிக்கான நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான சர் பி.டி. தியாகராயர்.
அவர்தான் சென்னை ஆயிரம் விளக்கு மாநகராட்சி பள்ளியில் முதன்முதலாக மதிய உணவு திட்டத்திற்கு முன்னோடியான பகல் நேர உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார். வில்லுடை வேந்தர் எனப் போற்றப்படும் பி.டி.தியாகராயரால் சென்னை மாநகராட்சி கவுன்சில் அனுமதி உடன் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டத்தை ஓரப்பாளையம், மிர்சாகி பேட்டை, சேத்துப்பட்டு என மாநகராட்சி பள்ளிகளுக்கு பிரிவு படுத்துகிறது நீதிக்கட்சியின் ஆட்சி.
ஒரு மாணவரின் உணவுக்கான செலவு ஒரு அனாதை தாண்டக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. மதிய உணவு திட்டத்தின் விளைவாக பள்ளிக்கூடங்களுக்கு வரும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட தரப்பைச் சேர்ந்த மாணவர்களே அதிகமாக பள்ளிக்கூடங்களுக்கு சென்று கொண்டிருந்த நிலையில் அனைத்து பகுதி மாணவர்களும் பள்ளிக்கூடங்களுக்கு படையெடுக்க தொடங்கின.
இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்த சிலர் நிதிச் செலவு அதிகரிக்கிறது நிதிநிலை அறிக்கையில் பற்றாக்குறை ஏற்படுகிறது என மதிய உணவு திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டனர்.
கடுமையான நெருக்கடிகள் காரணமாக 1925 ஏப்ரல் ஒன்றாம் தேதி மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. இது பள்ளிக்குச் செல்லும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடம் பெரும் சோர்வை ஏற்படுத்தியது.
இந்த சோர்வு பள்ளி வருகை பதிவேட்டிலும் எதிரொலித்தது. பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எனினும் நீதி கட்சி தலைவர்களின் தொடர் அழுத்தத்திற்கு பிறகு மதிய உணவுத் திட்டம் மீண்டும் தொடங்கியது. மீண்டும் ஏழை குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்களில் மதிய உணவு கிடைக்க திட்டம் தொடங்கப்பட்டது.
நீதிக்கட்சியின் ஆட்சியில் பகல் உணவுத் திட்டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தொடர்ந்து வந்து ஆட்சியாளர்களால் சென்னையை தாண்டி பிற பகுதிகளுக்கு சென்று சேர்க்க முடியாமல் போனது. இந்திய விடுதலைக்கு பிறகும் இந்த துயரம் தொடர்ந்தது. அப்போதுதான் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி ஏற்றார் காமராஜர்.
தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டினார் காமராஜர். அனைவரும் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் இலவச கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் காமராஜர்.
ஊரெங்கும் பள்ளிக்கூடங்கள் திறந்தாலும் பள்ளிக்கூடங்களுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது. அப்போதுதான் பசியும் பட்டினியுமாக கிடக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கு வராமல் பெற்றோருடன் வேலைக்குச் சென்று விடும் உண்மை முகத்தில் அறைந்தது.
பள்ளிக்கூடம் வரும் பிள்ளைகளின் பசியை போக்க வேண்டும் என திட்டமிட்டார் காமராஜர். தமிழ்நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 16 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க எவ்வளவு செலவாகும் என அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
மிகப்பெரிய மக்கள் நலத்திட்டத்திற்கு வழிவகுத்தது காமராஜரின் இந்த கேள்வி. ஓராண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என பதிலளித்தனர் அதிகாரிகள். அடுத்தடுத்த ஆண்டுகளில் செலவு எவ்வளவு அதிகமாகும் என அதிகாரிகள் கணக்கிட்டனர்.
ஆனால் மாணவர்களுக்கு சாப்பாடு போட்டு தீர்வது என்பதில் உறுதியாக இருந்த காமராஜர் தமிழ்நாட்டின் அப்போதைய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியத்தை அழைத்து பேசினார். அப்போது பிறந்தது தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம்.
நீதிக்கட்சி ஆட்சியில் மீட்டு மில்ஸ் அதாவது பகல் உணவு திட்டம் என்று இருந்த பெயர் காமராஜர் ஆட்சியில் மதிய உணவு திட்டமாக பெயர் மாற்றம் பெற்றது. மக்கள் பங்களிப்புடன் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது. பாரதியார் பிறந்த எட்டயபுரத்தில் உள்ள பள்ளி க்கூட முதல் முதலாக மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது.
நிதி பற்றாக்குறை ஏற்பட்டு திட்டம் பாதியிலேயே தடைப்பட்டு விடக்கூடாது என விரும்பிய காமராஜர் ஒன்றிய அரசின் இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில் மதிய உணவுத் திட்டத்தில் இணைக்க கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
மாணவர்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய மதிய உணவுத் திட்டம் காமராஜரின் அரசியல் வாழ்க்கையில் அசைக்க முடியாத சாதனையாகவே மாறிப்போனது. பள்ளிக் கல்விக்காக காமராஜர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக 1957 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 15,800 ஆக இருந்த தொடக்கப் பள்ளிகளின் எண்ணிக்கை 1962 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவியில் இருந்து காமராஜர் வெளியேறிய போது 29 ஆயிரம் அதிகரித்து இருந்தது.
637 ஆக இருந்த உயர்நிலைப் பள்ளிகள் 1995 ஆக உயர்ந்திருந்தது. பள்ளிக்கூடம் வரும் மாணவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்திலிருந்து 40 லட்சமாக இரட்டிப்பு வளர்ச்சியை கண்டது. ரட்சகன் என்றும் கல்வி வள்ளல் என்றும் காமராஜரை பாராட்டி அவரது அரசியலுக்கு பக்கபலமாக நின்று தமிழ்நாடெங்கும் பள்ளிக்கூடங்களை திறக்க தூண்டுகோலாக இருந்தார் பெரியார்.
இதை சுட்டிக் காட்டும் வகையில் பள்ளிக்கல்வியில் காமராஜர் செய்த புரட்சியை பாராட்டி தலையெங்கும் எழுதிய ஆனந்த விகடன் ஏடு காரணம் பெரியார் காரியம் காமராஜர் என அதற்கு தலைப்பு விட்டது.
1977 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சரான எம்.ஜி.ஆர். மதிய உணவில் ஊட்டச்சத்துள்ள பொருட்களை சேர்த்து வழங்கி திட்டத்தை மேம்படுத்த விரும்பினார். அதற்காக சத்துணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தார் எம்.ஜி.ஆர்.
பசித்தால் அழ மட்டுமே தெரிந்த வயதில் பசி கொடுமையை உணர்ந்தவன் நான் எனக் கூறிய எம்.ஜி.ஆர் தனது ஆட்சி காலத்தில் சத்துணவு திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மதிய உணவில் சத்தான காய்கறிகளை கொண்டு சுகாதாரமான இடத்தில் வைத்து மாணவர்களுக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதை சத்துணவு திட்டம்.
ஆனால் காமராஜர் ஆட்சியில் இருந்ததைப் போலவே நிதிச்சுமையை காரணம் காட்டினர் சில அதிகாரிகள். சத்துணவு திட்டம் அரசுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி விடும் என்று எச்சரித்தனர். எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் எதிர்மறை கருத்துக்களை புறந்தள்ளி சத்துணவு திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியோடு இருந்தால் எம்.ஜி.ஆர்.
1982 – 83 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 100 கோடி ரூபாய் காண சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். 1982 ஜூலை மாதம் முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் சத்துணவுத் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
அந்தத் திட்டத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டம் என பெயர் சூட்டப்பட்டது. பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற குழந்தைகளுக்கு மட்டும் சத்துணவு என இல்லாமல் பள்ளிக்குச் செல்லும் வயதை எட்டாத குழந்தைகளுக்கும் சத்துணவு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதற்கேற்ப ஐந்து முதல் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அவரவர் பயிலும் பள்ளிக்கூடங்களில் சத்துணவு சாப்பிட்டு கொள்ளலாம். இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், குழந்தைகள் அங்கன்வாடி மையங்களிலும் சத்துணவு சார்பிட ஏற்பாடு செய்யப்பட்டது.
சத்துணவு திட்டத்தை கண்காணிக்க ஏதுவாக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் உயர்மட்ட குழுவும் உருவாக்கப்பட்டது. அந்த குழுவில் கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர் உள்ளிட்டோரிடம் பெற்றனர். இந்தத் திட்டத்திற்காக பொதுமக்களிடமிருந்தும் விதி திரட்டினார் எம்.ஜி.ஆர்.
தமிழ்நாடு முழுவதும் 17,000 அதிகமான சத்துணவு மையங்கள் திறக்கப்பட்டன. சத்துணவு திட்டத்தின் மூலம் 60 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பயனடைய தொடங்கின. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாக திகழ்வது தமிழ்நாடு தான்.
தமிழ்நாட்டைப் பார்த்து தான் மற்ற மாநிலங்களில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. இன்றைக்கு இந்தியா முழுவதும் உள்ள 11 லட்சத்திற்கும் அதிகமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் சுமார் 12 கோடி குழந்தைகள் மதிய உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மதிய உணவுத் திட்டம் பல மாநிலங்களில் நிறுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏராளம். மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டதால் மாணவர்களின் கற்றல் இடைவெளி அதிகரித்ததாகவும் ஏராளமான மாணவர்களின் இடை நிற்றலுக்கு இது வழிவகுத்ததாகவும் ஆய்வுகள் கூறுகின்றனர்.
கொரோனா கால கல்வி இழப்புகளை உடனடியாக சரி செய்யாவிட்டால் எதிர்காலத்தில் இந்தியா சுமார் 31 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான இழப்பை சந்திக்க நேரிடும் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மாணவர்களின் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதாக மட்டுமின்றி பள்ளிக்கூடத்திற்கு வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை மதிய உணவுத் திட்டம் அதிகப்படுத்தி உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
உலகின் பிற நாடுகளில் கூட இந்த திட்டம் இருந்தாலும் இந்தியாவின் மதிய உணவு திட்டம் உணவு பாதுகாப்பு சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. பள்ளிக்கூட சூழலின் ஒரு பகுதியாக குழந்தைகளுக்கு உணவளிப்பது இருக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு சட்டம் வலியுறுத்துகின்றது.
இதனால் ஒன்றிய அரசு மதிய உணவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமின்றி குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காக நிதி பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்கிறது.
நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டமாக இருந்ததை ஒன்றிய அரசு “பிரதமர் போஷன் திட்டம்” என்று பெயர் மாற்றம் செய்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒரு கட்சியின் ஆட்சியில் தொடங்கப்பட்டு மாற்றுக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முடித்து வைக்கப்படுகிற திட்டமாக சத்துணவு திட்டத்தை ஆட்சியாளர்கள் ஒருபோதும் கருதவில்லை.
தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சத்துணவு திட்டம் தொய்வின்றி தொடர்ந்தது. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்படுவதை அறிமுகம் செய்தார் கலைஞர்.
1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது சத்துணவில் இரு வாரங்களுக்கு ஒரு முட்டையும், 1996 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது வாரத்திற்கு ஒரு முட்டையும், 2006 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த போது வாரத்திற்கு இரு முட்டைகளும் வழங்க வழி செய்தார் கலைஞர்.
2007 ஆம் ஆண்டு காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி முதல் மாதத்தின் முதல் வாரத்தில் மூன்று முட்டைகள் வழங்கவும் கலைஞர் உத்தரவிட்டார்.
இவ்வாறு தொடர்ந்து மேம்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கூடங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சாதம் வழங்கப்படுகிறது. சாம்பார் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், கீரை சாதம், காய்கறி பிரியாணி என நாளுக்கு ஒரு வகையில் உணவு வழங்கப்படுவது மட்டுமின்றி வாரத்திற்கு ஐந்து நாட்கள் முட்டையும் வழங்கப்படுகிறது.
மதிய உணவுத் திட்டத்தில் தமிழ்நாட்டின் நீண்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக அரசு பள்ளிக்கூடங்களில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மதுரை படித்துறை பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு சென்ற முதலமைச்சர் மாணவர்களுக்கு உணவை பரிமாறி வரலாற்று திட்டமான காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாணவர்களுடன் அமர்ந்து தானும் உணவருந்திய அவர் உணவின் சுவை குறித்து ஆர்வமுடன் கேட்டறிந்தார். அருகில் அமர்ந்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு உணவை ஊட்டி விட்டும் முதலமைச்சர் மகிழ்ந்தார்.
அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி முதற்கட்டமாக 1,545 தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 மாணவர்கள் பயன்பெறுகின்றனர். இதற்காக 33 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காலை உணவு திட்டம் தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் 102 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சர் பி.டி.தியாகராயர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்த அதே நாளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக கூறினார்.
காலை உணவு திட்டம் வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் பள்ளி குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தை அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாகவே காலை உணவு என்பது மூளையின் அறிவார்ந்த செயல்பாடுகளை அதிகரிக்கும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. இவை மட்டுமின்றி காலை சிற்றுண்டி திட்டம் ஐந்து வகைகளில் பலனளிக்கும் என தமிழ்நாடு அரசு பட்டியல் இட்டு உள்ளது. முதலில் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கூடம் வருவதை உறுதி செய்யும் என்றும் மாணவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் என்றும் தமிழ்நாடு அரசு கூறி உள்ளது.
மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதோடு ரத்த சோகை குறைபாட்டை போக்கும் என்றும் கூறியிருக்கும் தமிழ்நாடு அரசு மாணவர்களின் வருகையை பள்ளிக்கூடங்களில் அதிகரிப்பதுடன் இடைநிற்றலை தடுத்து மாணவர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
குறிப்பாக வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை காலை சிற்றுண்டித் திட்டம் குறைக்கும் என்றும் தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் நாள்தோறும் வழங்கப்படும் சிற்றுண்டி பட்டியலையும் தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண்பொங்கல், ரவா கேசரி, சேமியா கேசரி என மிக நீளமான உணவுப் பட்டியலை குழந்தைகளின் காலை சிற்றுண்டிகாக தயாரித்து வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
காலை சிற்றுண்டி திட்டத்தின் பலனாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக திகழ்வார்கள் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் மட்டுமின்றி வீட்டில் உணவை புறக்கணித்துவிட்டு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவர்கள் கூட காலையில் சக மாணவர்களோடு அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிடுவதன் மூலம் உடல் நலன் ஏற்படுவதோடு கல்வியிலும் முழு கவனம் ஏற்படும்.
அறிமுக நிலையிலேயே பெரும் வரவேற்பை பெற்ற காலை சிற்றுண்டித் திட்டத்தை அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை இழந்தது. இதனை ஏற்று 1,545 பள்ளிகளுக்கு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் தான் திட்டத்தின் பயன் அனைத்து ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரத்து 122 பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும் 18 லட்சம் மாணவர்கள் இதனால் பயன்பெறுவார்கள் என்றும் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரு மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டும் திட்டம் என்று புகழப்படுகிறது. காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து உணவளித்து கல்வியையும் முன்னேற்றத்தையும் வழங்கும் திராவிட இயக்கத்தின் சமூக நீதிப் பயணத்தில் காலை சிற்றுண்டி திட்டம் புதிய மைக்கல் என்றால் அது மிகையல்ல.