Homeசெய்திகள்ஆவடிஅயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை

அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைக்குள் புகுந்த காட்டு பூனை

-

- Advertisement -

அயப்பாக்கத்தில் காட்டு பூனை வீட்டு சமையல் அறைகள் புகுந்ததால் பரபரப்பு. பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் அண்ணனூர் அபர்ணா நகரில் நேற்று இரவு காட்டுப் பூனை ஒன்று அங்குள்ள ஒரு வீட்டின் சமையலறைக்குள் புகுந்து கொண்டது. அந்த குடும்பத்தினர் சாதாரண பூனை தான் என்று நினைத்து அதன் அருகே சென்றபோது அந்த பூனை மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், தங்களை கடிக்க பாய்ந்ததாகவும் கூறி ஆவடி பல்லுயிர் பாதுகாப்பு இயக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பல்லுயிர் பாதுகாப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு பாதுகாப்பான முறையில் பூனையை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த 4 பேர் கொண்ட குழுவினர் அந்த காட்டுப் பூனையை பிடிப்பதற்கு சுமார் 1 மணி நேரம் போராடினர். இந்நிலையில் அங்கிருந்த பிளாஸ்டிக் கவரைக்கொண்டு அந்தப் பூனையை லாவகமாக பிடித்த அக்குழுவினர் வெங்கலிலுள்ள ஒரு அடர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று அந்த காட்டுப் பூனையை விடுவித்தனர்.

ஆக்ரோஷமான காட்டுப் பூனை வீட்டின் சமையல் அறைக்குள் நுழைந்த சம்பவம் அய்யப்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

MUST READ