சென்னை அருகே ஆவடியில் சி.ஆர்.பி.எப் வீரர் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜட் கட்டோச் (29). இவர் ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் காவலராக உள்ள நிலையில் அங்கு உடற்பயிற்சி ஆலோசகராக உள்ளார்.இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு சீமா தேவி என்ற பெண்ணுடன் திருமணமானது. தற்போது. சி.ஆர்.பி.எப் வளாகத்தில் காவலர்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் நேற்று பணியில் இருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து சக போலீசார் உடனடியாக அவரை மீட்டு முதலுதவி அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராஜட் கட்டோச் ஏற்கனவே இறந்துபோனதாக தெரிவித்தனர்.இதனையடுத்து ராஜட் கட்டோச் உடலை கைப்பற்றிய ஆவடி டாங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணியின் போது சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்கள் மத்தியில் மிகுந்த ஏற்படுத்தியுள்ளது.