ஆவடி அருகே ₹39.90 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்.
ஆவடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 33வது வார்டு சக்தி கனோப்லாஸ் பகுதியில் பூங்கா உள்ளது. இதை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நிதியின் கீழ் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்.ஆள்துணை கிணறு அமைத்தல், நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் புல்தரை அமைத்தல் பணிகளுக்கான அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புதிய திட்டப் பணிகள் மற்றும் பூங்கா சீரமைப்பு பணிக்காக ₹39.9 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளுக்கான துவக்க விழா நேற்று நடந்தது.இதனை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி திட்டப் பணிகளை துவக்கி வைத்தார்.இதனை தொடர்ந்து, பூங்காவை பார்வையிட்ட நாசர், பராமரிப்பின்றி கிடந்த, கழிப்பறைகள், மின் கோபுரவிளக்குகள் என அடிப்படை வசதிகளை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதற்கு முன்னதாக, சக்தி கனோப்லாஸ் பகுதி மக்கள் ஆவடி முதல் அம்பத்தூர் பேருந்து நிலையம் வரை மினி பேருந்து வசதியை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று கொண்ட எம்எல்ஏ நாசர், நடவடிக்கை எடுத்து விரைவில நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஆவடி மாநகர ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான்,ஆவடி மாநகர மேயர் உதயகுமார், மாநகர செயலாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் ராஜேந்திரன், மன்ற உறுப்பினர் ஹரி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..