மாநகராட்சியாக உருவெடுத்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் பிறகு மண்டல குழு தலைவர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுக்கு என தனி அலுவலகங்கள் இயங்க உள்ளது.. ஆவடி மாநகராட்சியை விரிவுபடுத்தி அரசாணை வெளியிட்ட நிலையில் பணிகளை மேற்கொள்ள தனி அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டில் மாநகராட்சியாக உருவாகிய ஆவடியில் 4 மண்டலங்கள் 48 வார்டுகள் உள்ளது ஆவடி மாநகராட்சியுடன், பூந்தமல்லி, திருவேற்காடு, திருநின்றவூர் ஆகிய மூன்று நகராட்சிகள், 17 ஊராட்சிகள் இணைக்கப்பட்டு, மாநகராட்சி எல்லை மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மண்டல அலுவலகங்கள் இல்லாமல் இருந்த நிலையில் மாநகராட்சி அண்மையில் அரசாணை வெளியிடப்பட்ட சூழலில் தற்போது ஆவடி மாநகராட்சியில் மண்டல அலுவலகங்கள் மண்டல வாரியாக திறக்கப்பட்டுள்ளது..
மண்டலம் 1 ,2 ,4 ஆகிய மூன்று மண்டல அலுவலகங்களை அமைச்சர் நாசர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. திறப்பு விழாவில் மாநகர மேயர் உதயகுமார்,ஆணையர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.. மூன்றாவது மண்டல அலுவலகங்கள் கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில் விரைவில் திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது .. தொடர்ந்து ஒன்றரை கோடி மதிப்பீட்டில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் ,சமுதாய கழிப்பறை கட்டிடம், நுண்ணுயிர் உரக்கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை பயன்பாட்டுக்கு அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்..
மொழிப்போராட்ட தியாகிகள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோருக்கு மரியாதை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்