செல்போனில் கேம் விளையாடிய இளைஞர் தற்கொலை
செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததாள் மன உளைச்சலில் கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ்குமார்/(19). இவர் பூந்தமல்லி அருகே தனியார் கல்லூரியில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக தினேஷ்குமார் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே செல்போனில் கேம் விளையாடி கொண்டு இருந்துள்ளார். இதைப் பார்த்த தந்தை குருமூர்த்தி மகனை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த தினேஷ்குமார் படுக்கை அறையில் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அறையில் சென்று பார்த்த போது தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தினேஷை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.