spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஇருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்பு

-

- Advertisement -

சென்னை திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில்  வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு  கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர் (32) இவர் அதே பகுதியில் சிக்கன் கடையில் வேலை செய்து வருகிறார்

we-r-hiring

இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வலிப்பு நோய்  ஏற்பட்டு உயிரிழப்புஇவர் தனது ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல்  புதியதாக கட்டப்பட்ட மணலி  பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தின்  மீது  திருவொற்றியூர் நோக்கி வரும் போது  ரவிசங்கர்  தீடீரென வலிப்பு நோய்  ஏற்பட்டு இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து செண்டர் மீடியனில் அடிப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து செங்குன்றம் புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ