Homeசெய்திகள்சென்னைசென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…

-

- Advertisement -

சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுகவினர் விநியோகித்து வரும் பத்தாயிரம் ரூபாய் QR கோட் டோக்கன்கள் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.சென்னையில் அதிமுகவினர் 10,000 ரூபாய் QR கோட் டோக்கன்கள் விநியோகம்…சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.ரவீந்திரன்  தொடர்ந்திருந்த வழக்கில், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனோவுக்கு ஆதரவாக ஒவ்வொரு வீட்டிற்கும் கியூ ஆர் கோட் டோக்கன்கள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு இந்த க்யூ ஆர் கோடுகளை பயன்படுத்தி பத்தாயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொள்ளுமாறு அதிமுகவினர் தெரிவித்து வருவதாகவும் இது  தேர்தல் முறைகேடு என்றும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

we-r-hiring

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதிகாரி மற்றும் அருள் முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் இரண்டு புகார்கள் வந்ததாகவும் இது குறித்து பறக்கும் படையால் சோதனை நடத்தப்பட்டதாகவும் ஆனால் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த புகார் குறித்து காவல்துறை உதவியுடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

புதிய சர்சையில் வருமானவரித்துறை – விதிகளை மீறியதாக பரபரப்பு புகார்…

MUST READ