திருமண நாளில் நான்கு வயது மகனனை பறிகொடுத்த தம்பதியினர்
மணலி விரைவுச் சாலையில் குடும்பத்தினருடன் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னை திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சேகர் தனது திருமண நாளை கொண்டாடுவதற்காக மனைவி பூங்கோதை மற்றும் நான்கு வயது மகன் நிஷாந்த் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மணலி விரைவு சாலை (MFL), அருகே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் குழந்தை உட்பட இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவொற்றியூர் ஆகாஷ் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நான்கு வயது சிறுவன் நிஷாந்த் உயிரிழந்துள்ளார். தலையில் பலத்த காயத்துடன் சேகர் மற்றும் அவரது மனைவி பூங்கோதை ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது தொடர்பாக மயிலாடுதுறை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஸ்ரீதரை செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி நாளில் மோதும் 5 முக்கிய தமிழ் படங்கள்! (apcnewstamil.com)
திருமண நாளை கொண்டாடுவதற்காக மகனுடன் சென்ற தம்பதியர் விபத்தில் மகனை பறி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.