Homeசெய்திகள்சென்னைகோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

-

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வகையில் சென்னையில் முக்கிய சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

தமிழ்நாட்டில் கடந்த மாத முதலே கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கத்தரி வெயிலும் தொடங்கி இருப்பதால் பல்வேறு நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலில் வாகனங்களை ஓட்டிச் செல்லும் மக்கள் சிக்னல்களில் காத்திருக்கும் நேரத்தில் சற்று இளைப்பாறும் விதமாக முதற்கட்டமாக 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகை அருகே உள்ள ராஜா முத்தையா சாலையில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தலை பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் வாகன ஓட்டிகள் உடன் கலந்துரையாடினார்.

கோடை வெயிலில் வாகன ஓட்டிகள் இளைப்பாறும் வசதி

காற்றுடன் கனமழை பெய்தாலும் சேதம் அடையாத வகையில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

பசுமை பந்தல்களுக்கு அருகே வாகன ஓட்டிகள் அருந்துவதற்காக தண்ணீர் பந்தலும் உள்ளது. முதற்கட்டமாக 8 சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு இருக்கும் நிலையில் தேவைக்கு ஏற்ப அந்த எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

MUST READ