அம்பத்தூரில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் சோதனை.5 க்கும் மேற்ப்பட்ட கடைகளில் 50 கிலோ அளவில் கெட்டுப்போன மாமிசங்கள் மற்றும் உணவுகள் பறிமுதல்..
சென்னை அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களில் திடீர் சோதனை நடத்தி மண்,தூசி,வாகனபுகை விழும் அளவிற்கு வைத்திருந்த சவர்மா கடைகளும் அகற்றப்பட்டன. முறையாக பராமரிக்கப்படாத குளிர் பதன பெட்டியில் இரண்டு நாட்களுக்கு மேல் வைக்கப்பட்ட சிக்கன்,மட்டன்,பீப் உள்ளிட்ட மாமிச கறிகள் வைத்திருந்த துரித உணவு கடையும் சீல் வைக்கப்பட்டது. கிலோ கணக்கில் குளிரூட்டப்பட்ட மாமிச வகைகள் குப்பைத்தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.துரித உணவிற்கு பயன்படுத்தும் பாஸ்மதி அரிசி சாப்பாட்டை சுவரோடு சுவராக ஒட்டி வைத்திருந்ததற்காக சாப்பாடுகளும் குப்பை தொட்டியில் கொட்டி அழிக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் போஸ் உள்ளிட்ட 3 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அம்பத்தூரின் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்..