Homeசெய்திகள்சென்னைசென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

-

- Advertisement -

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.75 லட்சம் மதிப்புடைய 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.

கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் வந்த பயணிகளை, விமான நிலைய சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரஃபிக் ஆகிய இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் நிறுத்தி சேதனை மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளுக்குள், ஆயிரக்கணக்கான சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.  சுமார் ரூ.75 லட்சம் மதிப்பிலான 5,400 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மத்திய வனக்குற்றப்பரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தாய்லாந்து, மலேசியாவில் அதிகமாக காணப்படும் இந்த ஆமைகள் அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். அதோடு மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப் படுகின்றன.

இதனை அடுத்து, நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் இருந்து கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், 5,400 அலங்கார நட்சத்திர ஆமைகளும், மலேசியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்பட்டன. தொடர்ந்து, நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்த 2 பயணிகளையும், சுங்க அதிகாரிகள் கைதுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ