spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

-

- Advertisement -

மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி உயிரிழப்பு

சென்னையில் மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்த மாணவி ப்ரீத்தி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணவி

சென்னை பறக்கும் மின்சார ரயிலில் கடந்த 2 ஆம் தேதி ப்ரீத்தி என்ற கல்லூரி மாணவி பயணித்துள்ளார். சென்னை இந்திராநகர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது, ப்ரீத்தியின் செல்போனை இருவர் பறிக்க முயன்றதாக தெரிகிறது. அவர்களிடமிருந்து செல்போனை காப்பாற்ற முயன்றபோது ரயிலில் இருந்து ப்ரீத்தி தவறி கீழே விழுந்தார். உடனே மாணவியை மீட்ட ரயில்வே போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த ப்ரீத்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

we-r-hiring

மாணவி

சென்னை இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி ரயிலில் இருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ், மணிமாறன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

MUST READ