Homeசெய்திகள்சென்னைகும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

-

கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிப்பு

எண்ணூர் ரயில் நிலையம் அருகே உயரழுத்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுது காரணமாக கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்

எண்ணூர் ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலையில் உயரழுத்த மின்கம்பியில் இருந்து ரயில்களுக்கு மின்சாரம் கடத்தும் கொக்கி பழுதடைந்ததால் சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. காலை முதல் ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்லக்கூடிய பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேராக ரயில் செல்லும் எனவும் வேறு எந்த ரயில் நிலையத்திலும் ரயில் நிற்காது என்று அறிவிக்கப்பட்டதால் கொதிப்படைந்து பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு புறப்பட்ட ரயிலை மறித்து பயணிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Train

நாள்தோறும் சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுவதாக கூறி அவர்கள் ரயில்வே அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பு படையினரும் ரயில் நிலைய அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். எண்ணூர் ரயில் நிலையத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் ரயில் நிற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியதை அடுத்து ரயில் பயணிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு வெளியே வந்தனர்.

MUST READ