சென்னை மக்களுக்கு அவசர உதவிக்கு தோழனாக 5 நிமிடத்தில் உதவிடும் காவல் ரோந்து வாகன சேவை தொடங்கியுள்ளது.சென்னை 12 காவல் மாவட்டங்களை கொண்டது. 100 என்ற அவசர கைபேசி எண் மூலம் பெறப்படுகின்ற அவசர அழைப்புகள் SPMCR மூலமாக பெறப்பட்டு, வான் செய்தி தகவலாக சென்னை ரேடியோ பிரிவு மூலம் சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு காவல் நிலையத்தின் ரோந்து வாகனம் மூலமாக அழைத்தவர் இடத்திற்கு உதவிக்காக அனுப்பப்படுகிறது. வாகனங்கள் GPS கருவி மூலமாக கண்காணிக்கப்படுகிறது. சென்னை பெருநகரில் ரோந்து சுற்றி வரும் வாகனங்கள் மூலமாக பொதுமக்கள் அழைப்புகளை அவசர அழைப்புகளாக கருதி உடனடி நடவடிக்கை உறுதி செய்யப்படுகிறது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரிலும், காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்), வடக்கு, கிழக்கு கூடுதல் ஆணையாளர்கள், 4 காவல் மண்டலங்களின் இணை ஆணையாளர்கள், 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், சென்னை நகரில் 234 ரோந்து வாகனங்கள் (PATROL -82, ADDL PATROL -29, GYPSY-98, SPL MOBILE -25) தகுந்த பாதுகாப்பு, சட்ட உதவிகள் செய்திடவும், உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி வழங்கப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், கொண்ட ரோந்து வாகனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட ரோந்து வாகனங்கள் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், குற்றம் நடக்க வாய்ப்புள்ள பகுதிகளிலும், பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் வசிப்பிடங்கள், பயிலும் கல்வி நிறுவனங்கள், வாகன பயண முனையங்கள், ஆகிய இடங்களில் ரோந்து சென்றும், இரவு ரோந்தில் வாகன தணிக்கை செய்து, குற்றம் நடக்காமல் தடுத்தும், பட்டா புத்தகங்கள் தணிக்கை மூலமாக அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தும், சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, விபத்துக்கள் போன்றவைகள் நிகழாமல் தடுத்தும், பொதுமக்கள் கூடும் இடங்களில் முன் நின்று, மக்களுக்கு நம்பிக்கையூட்டும், பாதுகாவலனாக செயல்பட்டு வருகின்றன.
12 காவல் மாவட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் தலா 3 ரோந்து வாகனங்கள் அதில் வெள்ளை நிற கிரிஸ்டா, இன்னோவா, ஜிப்சி பொலிரோ காவல் வாகனங்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் 3 பிரிவுகளாக காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆய்வாளா்களுக்கு பணி நியமிக்கப்பட்டு, அழைப்பு பெறப்பட்ட 5 நிமிடத்திற்குள் அழைப்பு கொடுத்த இடத்திற்கு வந்தடைந்து தேவையான அவசர சட்ட நடவடிக்கையுடன் குற்றம் மேலும் நடவாமல் தடுத்தும், உடனடி உயிர், உடமைகள், பொதுமக்கள் தேவைகள் போன்ற உதவிகளுக்காக இதர 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு மற்றும் மீட்பு படை, மின்சார வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் போன்ற இதர துறைகளின் உதவியுடன் உதவி வருகிறார்கள்.
நடப்பு 2025-ம் ஆண்டில், இதுவரை காவல் அவசர உதவி எண்.100 மூலம் 60, 417 அழைப்புகளும், இதர காவல் உதவி எண்கள் (பெண்கள் உதவிமையம் (1091) முதியோர் உதவி மையம் (1253), பந்தம் (9499957575), காவல் கரங்கள் (94447-171700). COP குறுஞ்செய்தி உதவி (95000-99100) மூலம் 9,211 அழைப்புகள் என மொத்தம் 69,628 அழைப்புகள் பெறப்பட்டு அவைகள் தனி நபர் சச்சரவுகள், குடிபோதையில் பிரச்சனைகள் சாலை விபத்துகள் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான நிகழ்வுகள். திருட்டு நிகழ்வுகள், மருத்துவ உதவி.
சந்தேக நபர்கள் நுழைவு. வாகன பழுது, சிறு குழந்தைகள் உதவி எண். முதியோர் அவசர உதவி எண். பெண்கள் அவசர உதவி எண். காவல் கரங்கள் (ஆதரவற்றோர் உதவி எண் பந்தம் உதவி எண் (75 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோரின் சட்ட இதர உதவிகளுக்கான அழைப்பு காவல் ஆணையரின் அவசர குறுஞ்செய்தி உதவி என அனைத்து அழைப்புகளையும் முறையாக பதிந்து ரோந்து வாகனங்கள் சுமார் 5 நிமிடங்களில் இருந்து போக்குவரத்து சூழலைக் கொண்டு 10 நிமிடங்களுக்குள்ளாக விரைவில் அழைப்பு விடுத்தவரை சந்தித்து தேவையான சட்ட உதவிகள், மின்சாரம் குடிநீர் தேவைகள் கழிவுநீர் அகற்றல் மரம் விழுதல், மின்கசிவு, வாயு கசிவு மற்றும் மருத்துவ உதவிகளுக்கான அழைப்பை பெற்று உடனடியாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அரசு துறையினரை இணைத்து பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய காவல்துறை சிறப்பான நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கண்ட அவசர உதவி அழைப்பு எண்களையும் சமூக வலைதளங்களான முகநூல், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம். யூடியூப் மற்றும் இ-மெயில் (copsmlchennai@gmail.com) ஆகியவற்றை தொடர்பு கொண்டு பொதுமக்கள் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கறிஞர்கள், நீதிமன்றங்கள் தான் நாட்டை தலைநிமிரச் செய்கிறார்கள் – செல்வப்பெருந்தகை பெருமிதம்!