Homeசெய்திகள்சென்னைஎந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின்

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் – உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

கடந்த அதிமுக ஆட்சியின் போது நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில், சிபிஐ விசாரணையால்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எந்த குற்றவாளியையும் தப்பிக்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என உறுதி அளித்தார்.

எந்த குற்றவாளியையும் தப்பிக்க விட மாட்டோம் - உதயநிதி ஸ்டாலின்சென்னை சேப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள், முகவர்கள் உள்ளிட்ட 1500 திமுகவினருக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொங்கல் பரிசுகளை வழங்கினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாமன்ற உறுப்பினர்கள் சிற்றரசு, மதன்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்று ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்நிழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மத்திய சென்னை தொகுதிக்குபட்ட அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் தொகுதி என 3 சட்டப்பேரவை தொகுதிகளில் 56 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறனின் வெற்றியை பெற்றுக் தந்தது சேப்பாக்கம் தொகுதி என்றார்.

13 மாதங்களில் 2026-ஆம் ஆண்டு மிக மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலை சந்திக்க போவதாக கூறிய அவர், முதலமைச்சர் சொன்னது போல் 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம் என்றும் அதில் முதல் தொகுதியாக சேப்பாக்கம் தொகுதியை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சேப்பாக்கம் தொகுதியில் யாரை நிறுத்தினாலும் வெற்றிப் பெற வைக்க வேண்டும் என பேசிய உதயநிதி ஸ்டாலின் இந்த முறை தலைவர் தன்னை வேறு தொகுதிக்கு மாற்றினாலும் மாற்றலாம் என்றும், ஆனால் வாக்காளர்கள் விடமாட்டார்கள் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

மக்கள் நலத்திட்டங்களால்தான் முதலமைச்சருக்கு தொடர்ந்து 10 தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய உதயநிதி, தேர்தலுக்குள் ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது நான்கு முறை சந்திக்க வேண்டும் என்றும் அரசின் சாதனைகளைச் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்றும் ஆலோசனைகளை வழங்கிய அவர், தகுதியுள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை மூன்று மாதங்களில் கொடுக்கப்படும் என்றார்.

சட்டப்பேரபைக்கு வந்து செல்வதுதான் ஆளுநரின் வேலை என விமர்சித்த உதயநிதி, தமிழ்தாய் வாழ்த்தும் தமிழ்நாடும் ஆளுநருக்கு பிடிக்காது என கூறினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு தவறான சம்பவத்தில் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதை குறிப்பிட்ட துணை முதலமைச்சர், கடந்த ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரித்துத்தான் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் எந்த குற்றவாளிகளையும் தப்பிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விட மாட்டார் என்றும் உறுதியளித்தார்.

MUST READ