சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்யும் நடைமுறையை மாற்ற தீட்சிதர்களுக்கு அதிகாரம் இல்லை.
கனகசபை தரிசனத்தை தடுப்பது ஆலய பிரவேச சட்டத்துக்கு எதிரானது என இந்துசமய அறநிலையத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில், ஒரு பொது கோவில்; தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன எனவும், கொரோனா கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்ட கனகசபை தரிசனம் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கனகசபையில் தரிசனம் செய்ய அனுமதித்த அரசாணையை மூலம் தங்கள் உரிமை பாதிக்கப்பட்டதாக தீட்சிதர்கள் தெரிவிக்காத நிலையில், எந்த தகுதியும் இல்லாத இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என இந்துசமய அறநிலையத்துறை பதில் மனுவில் கோரிக்கை.
இந்த வழக்கை டிசம்பர் 12க்கு தள்ளி வைத்தது தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு.