spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபோதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…

-

- Advertisement -

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைதாகியுள்ள நிலையில், நடிகா் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக  வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதாகி நடிகர் ஸ்ரீகாந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குண்டர் சட்டத்தில் வேறொரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் தான் நடிகர் ஸ்ரீகாந்திற்கு கொகைன் போதைப்பொருள் கிடைத்துள்ளதை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். ஸ்ரீகாந்தையும், பிரசாத்தையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்க் கொண்டு வரும் நிலையில், கைதான நடிகர் ஸ்ரீகாந்த் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை இரவு நுங்கம்பாக்கம் வீட்டில் கொகைன் பார்ட்டியை நடத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சனிக்கிழமை நடந்த பார்ட்டியில் ஸ்ரீகாந்த் பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பிரசாத் தன்னை வைத்து படம் தயாரித்துள்ளார். அப்போது எனக்கு ரூ. 10 லட்சம் பிரசாத் தரவேண்டும். அதனை கேட்கும் போது கொகைன் போதைப்பொருள் கொடுத்து பிரசாத் தான் பழக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் முறையாக பயன்படுத்திய பிறகு மீண்டும் மீண்டும் அவர் தான் இந்த பழக்கத்தை தனக்கு ஏற்படுத்தியதாகவும், பணம் கேட்கும் போதெல்லாம் கொகைன் கொடுத்து பழக்கத்தை அதிகப்படுத்தியது பிரசாத் தான் என்றும் அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் தொடா்புடைய பலரையும் போலீசாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படை…இந்நிலையில், நடிகா் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக வாக்கு மூலம் அளிக்கப்பட்டது. அவருக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல் துறையினா் சம்மன் அனுப்பியிருந்தனா். ஆனால் நடிகா் கிருஷ்ணா தனது செல்போனை சுவிட் ஆப் செய்து தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை என்பதாலும், செல்போனை சுவிட் ஆப் செய்துள்ளதாலும் நடிகா் கிருஷ்ணாவை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து சென்னை மாநகர காவல் துறையினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

அதிமுகவும், ஆர்எஸ்எஸ்-ம் ஒன்றுதான்! கொடியில் இருந்து அண்ணாவை எடுத்துவிடுங்கள்! விளாசும் அய்யநாதன்!

we-r-hiring

MUST READ