சமீபத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடந்த தக் லைஃப் பட இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன், தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அப்படி மன்னிப்பு கேட்ட தவறினால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது எனவும் கூறினர். அதன்படி, இந்த வழக்கு இன்று (ஜூன் 3) விசாரணைக்கு வந்த நிலையில் கமல் மன்னிப்பு கேட்க கெடு விதிக்கப்பட்டது. ஆனால் கமல் தன்னுடைய கடிதத்தில் மன்னிப்பு என்ற வரியை குறிப்பிடவில்லை. எனவே கர்நாடக உயர் நீதிமன்றம், தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி கர்நாடகாவில் வெளியாகாது என்றும் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர் படம் வெளியிடப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது. அதேசமயம் இந்த வழக்கு ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், “கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படத்தை இப்போதைக்கு வெளியிட மாட்டோம். தவறுகளுக்கு மட்டுமே மன்னிப்பு, தவறான புரிதல்களுக்கு அல்ல” என்று கமல்ஹாசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -