தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் உடன் இவர் நடித்த ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா சமீபத்தில் அன்னபூரணி என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இந்த படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அன்னபூரணி படம் குறித்து தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளியான Mr. லோக்கல் திரைப்படத்தின் படப்பிடிப்பினை Blake (பிளேக்) என்பவர் பொதுமக்களுடன் இணைந்து பார்த்துள்ளார்.
Sharing the screen with #Nayanthara mam wasnt in my bingo card for 2023 & IT HAPPENED! If only i could explain how surreal this all feels to have my first dialogue on screen to be interacting with her #Annapoorani
10 years after i started making my first tamil video on youtube. pic.twitter.com/qdxzoSz3Uq
— Blake (@chinepaiyenoffl) December 7, 2023
சீன நாட்டைச் சேர்ந்த இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது கனவாக இருந்ததாம். அப்போது நயன்தாரா படப்பிடிப்பை ஓரமாக நின்னு வேடிக்கை பார்த்த இவருக்கு தற்போது நயன்தாராவுடன் இணைந்த அன்னபூரணி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாம். இதனை அவரே தனது சமூக வலைதள பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.