Homeசெய்திகள்சினிமாகனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்..... மக்கள் நீதிமய்ய உறவுகளுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள்….. மக்கள் நீதிமய்ய உறவுகளுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்!

-

ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டதென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மிக்ஜாம் புயல் உருவானது. இந்த புயலினால் கனமழையானது தொடர்ந்து பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் சிரமத்திற்குள்ளானது. அதிக கன மழையினால் சில பாதுகாப்பு காரணங்கள் கருதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சாலைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மழை நிற்கும் வரை அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. ஆவடி பட்டாபிராம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டமேலும் குடியிருப்புகளுக்கும் புகுந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டெடுத்து முகாம்களின் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளை சமூக ஆர்வலர்கள் பலர் வழங்கி வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்களை இந்த பேரிடரிலிருந்து மீட்பதற்கு பலரும் பல இடங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில், ” நம் அரசாங்கம் எவ்வளவு தான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கை சீற்றங்களின் விளைவுகளை ஒரு எல்லை வரை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். இந்த சமயத்தில் நமது பாதுகாப்பை உறுதி கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு, இளமையானது மீண்டும் சீரடைய உதவ வேண்டிய அவசியம் இருக்கிறது. மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட கன மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்யுமாறு மக்கள் நீதி மையத்தின் உறவுகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

MUST READ