- Advertisement -
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சாண்டல்வுட் எனும் கன்னட திரையுலகில் சொற்ப அளவில் மட்டுமே நடிகர்கள் உள்ளனர். அதிலும், சிலர் மட்டுமே முன்னணி நடிகர்களாகவும், மக்களின் விருப்ப நாயகர்களாகவும் வலம் வருகின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் தர்ஷன். இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உண்டு. இந்நிலையில், கொலை வழக்கில் தொடர்பு உடையதாகக் கூறி கன்னட நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்துள்ளனர். இவருடன் சேர்ந்து அந்த வழக்கில் சுமார் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வௌியாகி உள்ளது.
மைசூரில் உள்ள சம்ராஜேந்திரா விலங்கியல் பூங்கா அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வைத்து நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவர் பெங்களூரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் அவர் கைதாகி இருக்கிறார். அந்நபரை கொலை செய்த மூன்று பேருடன் நடிகர் தர்ஷன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
https://x.com/i/status/1800410124202467700