spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்... 2015-ல் உதவியதாக உருக்கம்...

மயில்சாமியை நினைவு கூறும் சென்னை மக்கள்… 2015-ல் உதவியதாக உருக்கம்…

-

- Advertisement -
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு உருவான மிக்ஜாம் புயல், சென்னை, உள்பட வடமாவட்டங்களை புரட்டிப் போட்டது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போயின. பொதுமக்கள் பலரும் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் திரைப்பட பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.

மத்திய சென்னை மட்டுமன்றி சென்னை புறநகர் பகுதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் அவசர தேவைகளுக்கு கூட அழைக்க முடியாமல், தொலைதொடர்பு சேவைகள் முடங்கியுள்ளன.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் முதல் ஆளாய் களத்தில் வந்து நிற்பவர் நடிகர் மயில்சாமி. தான் வசித்து வந்த சாலிகிராம மக்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து செய்தார். ஒரு நடிகராக இல்லாமல் சக மனிதராக உணவு உள்பட அனைத்து உதவிகளையும் அவர் செய்து வந்தார். அப்பகுதியில் இதற்காகவே அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகம் உள்ளது. தற்போது மறைந்த நடிகர் மயில்சாமியை நினைவு கூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ