Homeசெய்திகள்சினிமாசென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்... கூலி படப்பிடிப்பில் பங்கேற்க ரெடி... சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்… கூலி படப்பிடிப்பில் பங்கேற்க ரெடி…
- Advertisement -
வேட்டையன் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்ட இமயமலைக்கு புறப்பட்டுச் சென்ற ரஜினிகாந்த் சென்னை திரும்பியிருக்கிறார்.

கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி சுமார் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இத்திரைப்படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படம் தான் வேட்டையன். இப்படத்தை ஜெய்பீம் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஞானவேல் இயக்குகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். மேலும், படத்தில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி புறப்பட்டுச் சென்றார். அங்கு, பிரபல தொழில் அதிபர் லுலு குழுமத் தலைவரை சந்தித்துப் பேசினார். சென்னை திரும்பிய அவர், மீண்டும் ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றார். ஆண்டுதோறும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டுச் செல்லும் ரஜினி, நடப்பாண்டும் பத்ரிநாத், கேதார்நாத், பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இந்நிலையில், ஒரு வார கால பயணமாக இமயமலை சென்ற ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். இதையடுத்து விரைவில் தொடங்க இருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பங்கேற்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.