- Advertisement -
ரோபோ சங்கா் மறைவிற்கு தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தனது இரங்கலை தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நண்பர் ரோபோ சங்கர் காலமான செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர். அனைவரிடத்திலும் அன்போடு பழகும் பண்பாளர். நண்பர் ரோபோ சங்கர் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று தனது இரங்கலை தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
முகத்தை மூடிய எடப்பாடி! ஏன் தெரியுமா? குஜராத்தியில் திட்டிய அமித்ஷா!