spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் 'ஆர்யன்'.... கம்பேக் கொடுப்பாரா விஷ்ணு விஷால்?

800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் ‘ஆர்யன்’…. கம்பேக் கொடுப்பாரா விஷ்ணு விஷால்?

-

- Advertisement -

‘ஆர்யன்’ திரைப்படம் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் 'ஆர்யன்'.... கம்பேக் கொடுப்பாரா விஷ்ணு விஷால்?

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தொடங்கப்பட்ட திரைப்படம் தான் ஆர்யன். ராட்சசன் படத்தை போல் கிரைம் திரில்லர் இன்வெஸ்டிகேஷன் ஜானரில் உருவாகி இருக்கும் இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த நிலையில் இன்று (அக்டோபர் 31) உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தை பிரவீன் கே இயக்க விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது. செல்வராகவன் இதில் வில்லனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தின் டீசரும், ட்ரைலரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படமானது உலகம் முழுவதும் 800-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் 'ஆர்யன்'.... கம்பேக் கொடுப்பாரா விஷ்ணு விஷால்? விஷ்ணு விஷாலுக்கு இது மிகப்பெரிய வெளியீடாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பலரும் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். எனவே ‘லால் சலாம்’ படத்தின் தோல்விக்கு பிறகு இந்த படம் விஷ்ணு விஷாலுக்கு சிறந்த கம்பேக் படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.

MUST READ