spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு – மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

-

- Advertisement -

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு. பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.11ம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சுதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் தங்ககணேஷ். இவரது மகன் தேவேந்திரன். 17 வயதான இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிக்குச் செல்வதற்காக ஊரில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறி ஸ்ரீவைகுண்டம் வந்து கொண்டிருந்தார்.

அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி உள்ளனர். அந்த கும்பல் பேருந்தில் இருந்த தேவேந்திரனை இழுத்து பேருந்துக்கு கீழே போட்டுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக அந்த மர்மகும்பல் வெட்டியுள்ளது. இதில் தேவேந்திரனுக்கு தலையில் பல வெட்டுகள் விழுந்துள்ளது.

we-r-hiring

பேருந்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து பேருந்தில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வேகமாக சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் பத்மபநாபபிள்ளை வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவனை சராமரியாக வெட்டிய சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஆன்லைன் மோசடி: இரண்டு பேர் கைது – ரூபாய் 15 லட்சம் பறிமுதல்

MUST READ