Homeசெய்திகள்க்ரைம்திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு

-

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு

சென்னை எண்ணூரில் EB மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க வந்த 28 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 40 நாட்கள் ஆகியும் கைது செய்யாததால் பெண்ணின் பெற்றோர்கள் வேதனை அடைந்தனர்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு
பொதுநல மருத்துவர்.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அனல் மின் நிலைய ஓய்வு பெற்ற ஊழியர்  இவர்.  கடந்த 2019 ஆம் ஆண்டு பணியில் இருக்கும் பொழுது அனல் மின் நிலைய அலுவலகத்திற்கு உள்ளே மின்வாரிய மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக தண்டையார்பேட்டை சோலையப்பன் தெருவைச் சேர்ந்த டாக்டர் சபரி மோகன் என்பவர் மருத்துவர் பணியில் சேர்ந்தார்

அப்பொழுது அனல் மின் நிலைய ஊழியரின்  மகள் 28 வயதான பெண் உடல்ரீதியான சிகிச்சைக்காக  அனல் மின் நிலைய மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது மருத்துவருக்கும், பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது இதில் அடிக்கடிப் பழகி அவர்களின்  நட்பு நெருக்கமானது. மருத்துவர் சபரி மோகன் பெண்ணின் செல்போன் எண்களை  வாங்கி ஆபாச மெசேஜ் அனுப்பி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் பேசுவதற்கு மறுத்த பொழுது உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் திருமணத்திற்கு முன்பு ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வதற்காகவே ஆபாச பதிவுகளை அனுப்புவதாக சமாதானம் கூறியுள்ளார்

தன்னை திருமணம் செய்து கொள்வதாக  கூறியதை நம்பி பெண்ணும் இதற்கு உடன் படவே இருவரும் ஆபாச கருத்துகளையும் பதிவுகளையும் புகைப்படங்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்

இதனை அடுத்து மருத்துவர் சபரி மோகன் பெண்ணை  மருத்துவமனைக்கு அழைத்து ஆசை வார்த்தைகளை கூறி உணர்ச்சிகளை தூண்டி பலாத்காரம் செய்துள்ளார். பெண்ணின் குண நலன்களையும் குடும்ப சூழ்நிலையும் பிடித்திருப்பதாகவும் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து பெண்ணை ஏமாற்றி அடிக்கடி மருத்துவர் சபரி மோகன் நெருக்கமாக இருந்துள்ளார்.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி பலாத்காரம் செய்த மருத்துவர் மீது வழக்கு பதிவு
டாக்டர். சபரி மோகன்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை கோயம்பேட்டில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தனது ஆசைக்கு இணங்க சொல்லிய பொழுது பெண் மறுத்துள்ளதால் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதாகவும் மறுத்தால் அதை இணையதளத்தில் பதிவிடுவதாக மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்

மருத்துவர் சபரி மோகன் தன்னை நிச்சயமாக திருமணம் செய்து கொள்வதாக நம்பிய பெண் வீட்டிற்கு சென்ற பொழுது பெண்ணிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. பின்னர் நடந்த நிகழ்வுகளை கூறி மருத்துவர் சபரிமோகனை காதலிப்பதாகவும் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதனை அடுத்து மருத்துவரை தொடர்பு கொண்ட பொழுது மருத்துவர் பேசாமல் தொடர்புகளை துண்டித்துள்ளார்

இதனிடையே கடந்த மாதம் ஏப்ரல் மாதம் நான்காம் தேதி சேலத்தை சேர்ந்த  வேறு பெண்ணுடன் மருத்துவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த பெண் உறவினர்கள் பெற்றோர்கள் மருத்துவரை  சந்தித்து கேட்ட பொழுது தகாத வார்த்தைகளில் பெற்றோரை திட்டி அனுப்பியதாக தெரிகிறது

உங்களுக்கு டாக்டர் மாப்பிள்ளை கேட்கிறதா ஒழுங்காக பெண்ணை வளர்க்கத் தெரியவில்லை என அவதூறாக பேசி பெற்றோரை சபரி மோகனும் அவரது சகோதரரும் அவமானப்படுத்தி அனுப்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து பெண்ணின் பெற்றோர்கள் எண்ணூர் மகளிர் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகார் அளித்துள்ளார்

புகாரின் பேரில் விசாரணையில்  ஈடுபட்ட போலீசார் பெண்ணுக்கு செல்போனில் அனுப்பிய செல்போன் பதிவுகளையும் மற்றும் உரையாடல்களையும் வைத்து மருத்துவர் சபரி மோகன்  மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ஆனால் வழக்கு பதிவு செய்து 40 நாட்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மகளிர் ஆணையத்தில் பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் மருத்துவரை கைது செய்யக்கோரி உத்தரவிட்டும்   போலீசார் கைது செய்ய தயங்குவதாக கூறப்படுகிறது. உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதனால் இதெல்லாம் தங்கள் குடும்பத்திற்கு சர்வ சாதாரணம் என மருத்துவர்கள் வீட்டில் அலட்சியப்படுத்துவதாலும் இதுவரை மருத்துவர் சபரி மோகன் 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்து தன் மீது பழி வராத வரை பாதுகாத்துக் கொண்டுள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி நெருக்கமாக பழகி மோசடி செய்த மருத்துவர் சபரி மோகனை கைது செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

MUST READ