திருமணமாகி 22 நாட்களில் புதுமணப்பெண் பூமிகா தூக்கிட்டு தற்கொலை தேவகோட்டை சார் ஆட்சியர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விசாரணை.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பாண்டித்துரை (29). இவருக்கும் சிவகங்கை தாலுகா உசிலம்பட்டியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் பூமிகா (19) வயது பெண்ணுக்கும் கடந்த 03.02.25 அன்று இரு வீட்டார் முன்னிலையில் திருமணமாகியது. திருமணமான 22 நாட்களே ஆன நிலையில் நேற்று இரவு தனது கணவர் பாண்டித்துரை வீட்டில் பூமிகா சேலையால் தூக்கிட்டு தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில் இறந்த புதுப்பெண் பூமிகாவின் மூத்த சகோதரி சோபனா அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.எஸ்.கோட்டை போலீசார் பூமிகாவின் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் திருமணமான பூமிகா சிவகங்கை அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.
பூமிகாவுக்கும் பாண்டித்துரைக்கும் இடையே திருமணம் ஆனதிலிருந்து கருத்து வேறுபாடு இருந்ததாக தெரியவந்தது. நாளடைவில் சரியாக விடும் என பெற்றோர்கள் பூமிகாவுக்கு ஆறுதல் கூறிவந்த நிலையில் நேற்று மாலை பூமிகா கல்லம்பட்டியில் கணவரின் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டது.
தகவல் அறிந்து வந்த தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயூஸ் வெங்கட்வத்ஸ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் புது மணப்பெண் இறப்பு குறித்து நேற்று இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தினார். திருமணமாகி வெறும் 22 நாளில் புதுமணப்பெண் கணவர் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டித்துரை துபாயில் வேலை பார்த்து வந்ததும் துபாயிலிருந்து கடந்த 3 மாதம் முன்புசொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது. திருமணமான பின்பு மனைவியுடன் மனம் விட்டு பேசும் சமயம் ஏற்கனவே துபாயில் மதுபான பாருக்கு நிகழ்ச்சிக்கு வந்த ஒரு பெண்ணை தான் காதலித்ததாகவும் அதன் பின்பு அந்த பெண்ணுக்கு திருமணம் நடந்தது தெரிய வந்ததும் காதலை கைவிட்டதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
அதை அறிந்த பூமிகா மணம் வெறுத்து கணவருடன் பேசுவதையே நிறுத்திக் கொண்டார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதும் பிரச்சனையாகவும் இருந்துள்ளது. இதனை பூமிகா தன் பெற்றோரிடம் தெரிவித்த போது மனமகன் வீட்டாரிடம் கேட்டபோது பிரச்சனை ஏற்பட்டுள்ளது தற்பொழுது அவன் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறான், ஏன் பிரச்சனை செய்கிறீர்கள் என்று அவர்கள் தெரிவித்ததை எடுத்து பெற்றோரும் பூமியாவுக்கு ஆறுதல் கூறி நாட்கள் கடந்தால் சரியாகிவிடும் என்று கூறியிருக்கிறார்கள் இதில் மன உளைச்சலில் இருந்த பூமிகா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.