Homeசெய்திகள்க்ரைம்பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி

பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி

-

பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி
மஞ்சுளா

காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு சில ஆண்டுகளிலேயே வாழ்க்கை கசந்து போய் இருக்கிறது . பிற பெண்களுடன் அந்த வாலிபர் தொடர்பில் இருந்திருக்கிறார். அடிக்கடி மது குடித்துவிட்டு வந்தும் மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார். இதனால் காதல் மனைவிக்கும் ஆத்திரம் தலைக்கு ஏறி இருக்கிறது . தோழியுடன் சேர்ந்து கணவருக்கு விஷம் வைத்து கொலை செய்து காட்டில் வீசி இருக்கிறார். கடலூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

வடலூர் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர். கட்டிட தொழிலாளியான இந்த வாலிபர் பச்சையாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளார்கள்.

தற்போது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார் மஞ்சுளா. கடந்த 30ஆம் தேதி அன்று பொன்னையன்குப்பத்தில் இருக்கும் கருப்பு தோட்டத்தில் உடல் அழுகிய நிலையில் ஒரு வாலிபரின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது . குள்ளஞ்சாவடி போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் அது பார்வதிபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரிய வந்திருக்கிறது .

பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி
காதல் கசந்தது

இது தொடர்பாக மஞ்சுளாவிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவரின் நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. பின்னர் மஞ்சுளாவிடம் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்திய போது தான் தனது தோழி மற்றும் அவரின் கணவருடன் சேர்ந்து விஷம் கலந்து கொடுத்து கணவரை கொன்று வீசியது தெரிய வந்திருக்கிறது.

போலீசார் மஞ்சுளாவிடம் நடத்திய விசாரணையில், காதலித்து திருமணம் செய்து கொண்டோம். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக தான் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை. அதன் பின்னர் கணவர் தினமும் குடித்துவிட்டு பிரச்சினை செய்து வந்தார். பிற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். காதல் திருமணம் கசிந்து போய்விட்டது. காதல் திருமணம் செய்து கொண்ட நீங்கள் இப்படி செய்யலாமா என்று தட்டிக் கேட்டால் எங்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது . இந்த நிலையில் தான் கோடை விடுமுறைக்கு பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றேன். அப்போது தொண்டமானத்தில் இருக்கும் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன் . அவரிடம் கணவர் கொடுமைப்படுத்துவதாக சொல்லி அழுதேன். அப்போதுதான் தோழி வினோதியும் அவரது கணவர் சசிகுமாரும் சேர்ந்து மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிடலாம் என்று கூறினார்கள் . தோழியின் கணவரின் நண்பர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்த மோகனையும் உதவிக்கு வைத்துக் கொண்டோம்.

பிற பெண்களுடன் தொடர்பு! தோழியுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்து கொன்ற மனைவி
சடலம் மீட்பு

27ஆம் தேதி அன்று செல்போனில் கணவரிடம் பேசி தோழி வீட்டிற்கு வரவைத்து, அங்கு வந்ததும் சசிகுமாரும் மோகனும் மது குடிக்கலாம் என்று பொன்னையா கப்பம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ஏற்கனவே விஷம் கலந்து வைத்திருந்த மதுவை என் கணவரிடம் கொடுத்தார்கள். அதை குடித்துவிட்டு சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டார். உடனே அவரது உடலை அருகே இருந்த கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு வந்து விட்டார்கள் என்று சொல்லி இருக்கிறார்.

மஞ்சுளா அளித்த வாக்குமூலத்தின் படி மஞ்சுளா, சசிகுமார் , வினோதினி, மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

MUST READ