புதுக்கோட்டையில் தாய் மகள் இரட்டை கொலை வழக்கில் நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் ,தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும், விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி காவல் நிலையத்துக்கு உட்பட்ட வி . லட்சுமிபுரம் கிராமத்தில் கடந்த 2014ம் ஆண்டில் சொத்து பிரச்சனையில் தாய் அழகி (70), மகள் அடக்கம்மை (47) ஆகிய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். இந்த வழக்கில் அழகியின் மருமகள் சுப்பம்மாள், சுப்பம்மாளின் மகன்களான வெள்ளைச்சாமி, பாண்டியராஜன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய பாண்டி ஆகிய நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ஐம்பதாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2036 ஒலிம்பிக் போட்டி – அனுமதி கோரி அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்த இந்தியா