- Advertisement -
சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ.19,50,000 மற்றும் 114.500 கிராம் தங்கம் பிடிப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த லால் பாக் ரயிலில் இருந்து பெரம்பூர் ரயில் நிலையத்தில் இறங்கிய ஒருவரிடம் போலீசார் சந்தேகத்தின் பேரில் கொண்டு வந்த பையை ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.
சந்தேக நபர் கொண்டு வந்த பையில் ரூ.19,50,000 பணம் மற்றும் 114.500 கிராம் தங்க நகைகள் மறைத்து வைத்து இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஹவாலா பணம் கொண்டு வந்த நபரை விசாரணை செய்தபோது
ராணிப்பேட்டை மாவட்டம் நாவலூர் ரித்திக்( 23 )என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் பிடிபட்ட நபரை வருமான வரித்துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.