Homeசெய்திகள்க்ரைம்ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!

-

- Advertisement -

சென்னையில் பிறந்த 43 நாட்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி பெற்ற தாயே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உறங்காது இருந்த நிலையில் தாயும் தூக்கத்தை இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி பெற்ற குழந்தையை கொன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஒன்றரை மாதமே ஆன பச்சிளம் குழந்தையை கொன்ற கொடூர தாய்!சென்னை ஈஞ்சம்பாக்கம் செல்வா நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்(34) தனியார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.  இவரது மனைவி பாரதி 25 இவர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது. பாரதி இரட்டை குழந்தைகளையும் கட்டிலில் படுக்க வைத்து விட்டு வீட்டில் வேலைகளை பார்த்துவிட்டு மீண்டும் கட்டிலில் வந்து பார்த்த பொழுது அங்கே இருந்த குழந்தை ஒன்று காணாமல் போனதாகவும் ஒரே ஒரு குழந்தை மட்டும் கட்டிலில் இருந்ததாகவும் இது குறித்து தனது அண்ணன் சரவணன் இடம் அருண் தெரிவித்துள்ளதை அடுத்து இருவரும் சென்று நீலாங்கரை காவல் நிலையத்தில் குழந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளனா்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நீலாங்கரை காவல் நிலைய போலீசார் குழந்தையை யாரேனும் திருடி சென்றுள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணை செய்வதற்காக வீட்டில் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றினர். வீட்டை சுற்றி தேடி உள்ளனர். வீட்டில் பின்புறம் உள்ள காலி மனை அருகே இருந்த புதர் போன்ற பகுதியில் கட்டப்பை ஒன்றில்  இறந்த நிலையில் குழைந்தையின் சடலத்தை  போலீசார் மீட்டனா். பிறகு இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நீலாங்கரை உதவி ஆணையர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இது குறித்து குழந்தையின் தாய் பாரதியிடம் விசாரணை நடத்தினார்.

விசாரணையில் குழந்தையின் தாயார் பாரதி இரண்டு குழந்தையில் ஒரு குழந்தை மிகவும் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால், அதனை கவனித்துக் கொள்வதற்காக தான் இருந்து வந்ததாகவும், அதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில் இரண்டு குழந்தைகள் ஒரு குழந்தையை கட்டப்பையில் வைத்து 3 ஆவது மாடியில் இருந்து காலி மனையில் தூக்கி வீசி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  இறந்த குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிறகு குழந்தையை கட்டப்பையில் வைத்து மாடியில் இருந்து தூக்கி வீசி கொன்று விட்டு காணவில்லை என நாடக மாடிய குழந்தையின் தாயை நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பிறகு பாரதியின் தாயாரிடம் அவரை அனுப்பி வைத்தனர். மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது வரவேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.

மேலும் குழந்தை இறப்பை சந்தேகம் மரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தை இறந்ததற்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் கூறியுள்ளனா். தற்போது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பின்பு கொலை வழக்காக மாற்றம் செய்யவும் வாய்ப்பு உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனா்.

பெற்ற குழந்தையை கொன்று விட்டு குழந்தையைக் காணவில்லை  என நாடகம் ஆடிய நிலையில் குழந்தையை தாயை கொலை செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இச்சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதைப் பொருட்களின் புகழலிடமாக மாறிய தமிழகம் ஹெச்.ராஜாவின் குற்றச்சாட்டுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி

MUST READ