புத்தாண்டு வாழ்த்து சொன்னதில் ஏற்பட்ட தகராறு அடுத்த வார மாப்பிள்ளை பலி! போதையில் கொலை செய்து விட்டு தப்பியோடிய மூவரை தேடி வரும் காசிமேடு போலீசார்.
சென்னை காசிமேடு சிங்காரவேலர் ஒண்ணாவது தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் இவரது மனைவி தமிழ்ச்செல்வி இவர்களுக்கு குமரேசன் என்ற மகன் இருக்கிறார். இவர் மாலுமியாக கப்பலில் வெல்டர் வேலை செய்து வருகிறார். தற்போது விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கிறார். இவருக்கு தற்போது இரண்டாவது திருமணம் நடைபெற இருந்த நிலையில், இன்று புத்தாண்டு என்பதால் வீட்டிற்கு உணவு வாங்கி குமரன் மற்றும் அவரது நண்பர் ராகேஷ் இருவரும் தெரு வழியாக சென்று கொண்டிருந்தனர்.
அப்போது மூன்று பேர் அதே தெருவில் மது அருந்திவிட்டு முகமூடி அணிந்ததாக கூறப்படும் நிலையில் யார் அவர் தெரியாமல் குமரன் கேட்டிருக்கிறார். இதற்கு அந்த நபர் நான் தான் பட்டு சரவணன் என்று கூறி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு இடையே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அந்த மூன்று பேரும் மறைத்து வைத்த கத்தியை எடுத்து குமரனை சரமாரியாக வெட்டி இருக்கின்றனர். இதனை தடுக்கச் சென்ற ராக்கேசையும் வெட்டி இருக்கின்றனர்.
இவர்கள் சத்தம் கேட்கவே வீட்டிலிருந்த குமரன் அவரது தந்தை விசுவநாதன் ஓடி வந்து காப்பாற்ற முற்பட்டபோது அவரையும் தலையில் வெட்டிவிட்டு தப்பிச்சு சென்று இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அருகில் இருந்தவர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்தில் சென்ற காசிமேடு போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த குமரனை அவரது தந்தை மற்றும் நண்பர் ராகேஷ் ஆகிய மூன்று பேரையும் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் இந்த சம்பவத்தை தொடர்புடைய பட்டு சரவணன் ஆகாஷ் மற்றும் அபினேஷ் என்று தெரியவந்திருக்கிறது. அந்த மூன்று பேரையும் காசிமேடு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.