spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்

-

- Advertisement -

சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த உறவினர்

தருமபுரி மாவட்டம் காட்டம்பட்டி கிராமம் அருகே குடிநீர் தொட்டியில் இருந்து 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிமூலம்- சுதா தம்பதியின் 6 வயது சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் ஒட்டப்பட்டு குடிநீர் தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கு அச்சிறுவன், வீட்டருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்தபோடு மாயமானதாக தெரிகிறது.

we-r-hiring

நீண்டநேரமாகியும் சிறுவனை காணாததால், அவரது பெற்றோர், கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தானர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து சடலமாக சிறுவனை மீட்டனர். அப்போது அவரது கழுத்துப்பகுதியில் காயங்கள் இருந்துள்ளது. விசாரணையில் சிறுவனின் உறவினர் பிரகாஷ், ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து பிரகாஷை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை எனக்கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

MUST READ