குமரி சுற்றுலா தலத்தில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியவர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு இளம்பெண்களை மீட்டுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் மசாஜ் சென்டர்கள் உள்ளன. இவற்றில் ஏராளமான இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். மசாஜ் சென்டர்கள் இயங்க பல்வேறு விதிமுறைகள் உள்ளன. ஆனால் இங்கு பணியாற்றக் கூடியவர்கள் முறைப்படி மசாஜ் செய்வதற்கான பயிற்சி முடித்தவர்களாகவும், அதற்கான சான்றிதழ் பெற்றவர்கள் தான் பணியாற்ற வேண்டும்.
ஆனால் ஒரு சில மசாஜ் சென்டர்களில், முறைப்படி பயிற்சி முடித்தவர்களை வைத்து மசாஜ் செய்யாமல் இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாக பல்வேறு புகார் காவல்துறைக்கு வந்துள்ளது. குறிப்பாக குமரி சுற்றுலா தலமான குமரியில்
மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்ப தாக புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தர விட்டார்.
இந்நிலையில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு இரண்டு இளம்பெண்கள் இரண்டு வாலிபர்களுடன் இருந்துள்ளனர்.
அவர்களிடம் போலீசார் விசாரனை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த இரு இளம் பெண்களையும் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவர். அங்கிருந்த இளைஞர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த கேமன்ராஜ் (வயது 27), திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த சம்சீர் நவாஸ் (வயது 38) என்பது தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் ஆன்லைன் மூலம் குறிப்பிட்ட இந்த மசாஜ் சென்டரை தொடர்பு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் இருவரையும் கைது செய்த போலீசார் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடத்தியதாக நெய்யாற்றின்கரையை சேர்ந்த வைசாகன் (வயது 38) என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவரையும் கைது செய்தனர். மசாஜ் சென்டர்கள் விதிமுறைப்படி தான் இயங்க வேண்டும்.
மசாஜ் சென்டர் என்ற பெயரில் இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீ சார் எச்சரித்துள்ளனர். ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு மசாஜ் சென்டர்களுக்கு வருபவர்களும் கவனமாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுரை கூறி உள்ளனர்.