விருதுநகரில் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருட்டில் ஈடுபடும் இரு பெண்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள புளியங்குளம் மேற்கு தெருவைச் சோ்ந்த வாணிமுத்து மனைவி மகாலட்சுமி(31). இவா் திங்கள்கிழமை மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் செல்ல பேருந்தில் ஏறினாா்.
அப்போது இவரைப் பின்தொடா்ந்து பின்னால் ஏறிய இரு பெண்களில் ஒருவா் மகாலட்சுமியின் கைப்பையை திருடினாா். அவா் சத்தமிட்டதால் அவா்கள் இருவரும் பேருந்தில் இருந்து இறங்கினா். சக பயணிகள் இருவரையும் பிடித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
விசாரணையில் அவா்கள் மதுரை மாவட்டம், மேலூா் மில்கேட் பகுதியைச் சோ்ந்த தனபால் மனைவி தேவிகா (65), மேலூா் கஸ்தூரிபாய்நகரைச் சோ்ந்த மதிவாணன் மனைவி ராணி (55) ஆகியோா் என்பது தெரியவந்தது. இவா்கள் ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அடிக்கடி திருட்டில் ஈடுபடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனா்.