spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஐந்து வீடு அருவிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் மாலை வேலையில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பொள்ளாச்சியை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவன் நந்தகுமார் (21) எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளான்.  சில மணி நேரம் வெளியே வராததால் அவனது நண்பர்கள் பதற்றம் அடைந்தனா். அருவியில் மாணவன் விழுந்ததை அறிந்த அந்தப்பகுதி கிராம மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மாணவனின் உடலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு நேரம் என்பதாலும், அருவியில் நீர் அதிகரித்துக் காணப்பட்ட காரணத்தினாலும் மாணவனின் உடலை தேடும் பணியில் சிறது தொய்வு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து  மீண்டும் இன்று காலையில் வந்த தீயணைப்புத் துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

மேலும் மிகவும் ஆபத்தான இந்த அருவியில் இதுவரை 11 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை பள்ளி மாணவன் ஒருவன் நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கும்போது இறுதியாக எடுக்கப்பட்ட வீடியோ வைரலானது இந்நிலையில், ஏற்கெனவே ஐந்து வீடு பகுதிக்கு செல்லக்கூடிய பகுதியில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது வரை பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்படாததால் உயிரிழப்புகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கும் பரந்த சுற்றறிக்கை…

MUST READ