கேரளா மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் காட்டுப்பன்றிக்கு பயந்து கிணற்றுக்குள் தவறி விழுந்த பெண் 20 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.

தகவல் கொடுத்தால் ரூ. 10 லட்சம் சன்மானம்- என்.ஐ.ஏ அதிரடி..!!
அடூர் அருகே வசித்து வரும் எலிசபெத் என்ற பெண் மாட்டுக்கு புள் பறிக்க சென்றபோது, காட்டுப்பன்றி கூட்டம் வந்துள்ளது. அதைக்கண்டு அஞ்சிய பெண், கிணற்றின் மீது ஏறிய நிலையில் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். 50 அடி ஆழ கிணறு என்பதால் நீண்ட நேரம் சத்தம் போட்டும், யாருக்கும் கேட்கவில்லை.
இதனிடையே எலிசபெத்தை காணவில்லை எனக் கூறி, அவரது உறவினர்கள் காட்டுப் பகுதிக்குள் தேடி சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த கிணற்றில் எலிசபெத் சிக்கித் தவித்தது தெரிய வந்தது. இது குறித்து உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
“ஜெகன்மோகன் ரெட்டி அவ்ளோதான்” பிரசாந்த் கிஷேர் ஆருடம்..!!
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கி வலையின் உதவியுடன் எலிசபெத்தை பத்திரமாக மீட்டனர். 20 மணி நேரமாக கிணற்றில் தவித்தவர், சிறு காயங்களுடன் அடூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.