Homeசெய்திகள்இந்தியா"பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது"-ராகுல்காந்தி நம்பிக்கை!

“பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது”-ராகுல்காந்தி நம்பிக்கை!

-

 

"பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது"-ராகுல்காந்தி நம்பிக்கை!

பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 17) மாலை 06.00 மணியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், உத்தரபிரதேசம் மாநிலம், காசியாப்பாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராகுல்காந்தி, “பா.ஜ.க. 150 மக்களவைத் தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது; வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் குறித்து பிரதமரோ, பா.ஜ.க.வோ பேசுவதில்லை. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இந்தியா கூட்டணி அதிக தொகுதிகளில் ஜெயிக்கும்.

மரங்களின் நாயகன் பத்மஸ்ரீ விவேக் நினைவு தினம் இன்று!

பிரதமர் நரேந்திர மோடி ஊழலின் சாம்பியன் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்; பா.ஜ.க. தங்கள் கட்சியில் ஊழல்வாதிகளை வைத்துக் கொள்வது மட்டுமின்றி ஊழல் பணத்தையும் வைத்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணம் பறிக்கும் திட்டம் தான் தேர்தல் பத்திரம். பா.ஜ.க. செல்வாக்கு சரிந்து வருகிறது. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவான அலை மக்களிடையே வீசுகிறது” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

MUST READ