
எல்விஎம்3- எம்4 (LVM3- M3) ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலத்தை வரும் ஜூலை 14- ஆம் தேதி அன்று மதியம் 02.35 மணிக்கு ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் (SriHarikota) உள்ள சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் (Satish Dhawan Space Centre) இருந்து ஏவப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு!
சந்திராயன்- 3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த ராக்கெட்டில், அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம் பெற்றுள்ளன.
சந்திராயன்-3 விண்கலத்தை விண்ணில் ஏவுவதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் நேரில் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் சந்திராயன் -3 திட்டத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில் விண்வெளித்துறையில் இந்தியா தனக்கென்று தனி முத்திரையைப் பதிக்கும் என்றால் மிகையாகாது.
டி.ஐ.ஜி. தற்கொலை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
கடந்த 2008- ஆம் ஆண்டு சந்திராயன்-1 விண்கலத்தையும், கடந்த 2019- ஆம் ஆண்டு ஜூலை 22- ஆம் தேதி சந்திராயன்- 2 விண்கலத்தையும் இஸ்ரோ விண்ணில் ஏவியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


