Homeசெய்திகள்இந்தியா"ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்"- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

-

 

"ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்"- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!

ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.

‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., “நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை இருக்கிறது. எங்கள் குரல் நசுக்கப்படுகிறது; நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம். எங்களை பேச அனுமதிக்கவில்லை; ஆளுங்கட்சி நினைத்ததை எல்லாம் செய்கிறது.

வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?

ஜனநாயகத்தைப் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்; அதற்காக எங்களை சஸ்பெண்ட் செய்கின்றனர். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை இருக்கிறது. குஜராத்தில் வெள்ளம் என்றால் உடனே நிவாரண நிதி தருவார்கள்; தமிழகத்திற்கு தர மாட்டார்கள். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

MUST READ