ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா எம்.பி., “நாடாளுமன்றம் ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை இருக்கிறது. எங்கள் குரல் நசுக்கப்படுகிறது; நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறோம். எங்களை பேச அனுமதிக்கவில்லை; ஆளுங்கட்சி நினைத்ததை எல்லாம் செய்கிறது.
வர்ஷங்களுக்கு ஷேஷம் படத்தின் படப்பிடிப்பு நிறைவு…. ரிலீஸ் எப்போது?
ஜனநாயகத்தைப் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம்; அதற்காக எங்களை சஸ்பெண்ட் செய்கின்றனர். நாடாளுமன்றம் என்பது ஒரு கட்சிக்கு மட்டுமே என்ற நிலை இருக்கிறது. குஜராத்தில் வெள்ளம் என்றால் உடனே நிவாரண நிதி தருவார்கள்; தமிழகத்திற்கு தர மாட்டார்கள். தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.