Homeசெய்திகள்இந்தியாஅறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!

அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கிறது காங்கிரஸ் கட்சி!

-

- Advertisement -

 

Photo: Karnataka Assembly

கர்நாடகா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!

கர்நாடகா சட்டமன்றத்துக்கு கடந்த மே 10- ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், பதிவான வாக்குகள் நேற்று (மே 13) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி முந்தைய தேர்தலை விட, இம்முறை 55 தொகுதிகளைக் கூடுதலாக கைப்பற்றியுள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக 22 தொகுதிகள் கிடைத்துள்ளன.

ஆளும் பா.ஜ.க. 66 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் 104 தொகுதிகளை கைப்பற்றியுள்ள அக்கட்சி, இந்தமுறை 38 தொகுதிகளை இழந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. முந்தைய தேர்தலில், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அந்த கட்சி, இந்த முறை 18 தொகுதிகளை இழந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தை அதிகமுறை ஆட்சி செய்த கட்சி எது தெரியுமா?- விரிவான தகவல்!

பிற கட்சிகள், சுயேட்சைகள், நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் 10 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்துள்ளது. இதற்கு முன்னர், கடந்த 2013- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், காங்கிரஸ் 122 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

MUST READ