
கடந்த 1956- ஆம் ஆண்டு நவம்பர் 1- ஆம் தேதி அன்று தென்னிந்திய மாநிலங்களில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம் மைசூரு. அதன்பிறகு, கடந்த 1973-ஆம் ஆண்டு கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வெப்பம் குறைந்து, எப்போதும் இதமான சூழ்நிலையில் இருந்து வரும் பெங்களூரை அந்த மாநிலத்தின் தலைநகராக உருவாக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையும்…..கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியும்!
தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், ஆட்டோமொபைல்ஸ் மற்றும் மின்னணு பாகங்கள் உற்பத்திச் செய்யும் தொழிற்சாலைகள் என்று தொழில் நிறுவனங்கள் நிறைந்த நகரம் பெங்களூரு. இந்த நகரத்தை எலக்ட்ரானிக் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
வீடு கட்டுமானத்திற்கு தேவையான பொருட்கள், எலக்ட்ரானிக் சம்மந்தமான பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கென்று பெங்களூருவில் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு தனி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கே விலை குறைவு என்பதால், கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கர்நாடகா அரசின் வரி வருவாயில் பெங்களூரு முக்கிய பங்காற்றி வருகிறது.

பெங்களூரு நகரத்தைத் தாண்டினால் மகாராஷ்டிரா மாநில எல்லை மாவட்டங்கள், இன்னும் அடிப்படை வசதிக்கூட இல்லாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரலாறு!
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 1952, 1957, 1962, 1967, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்து வந்தது.
அதன் பின்னர், கடந்த 1983, 1985 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் ஜனதா கட்சி வெற்றி பெற்று காங்கிரஸ் இல்லாத ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.
“கர்நாடகா மாநில மக்களுக்கு நன்றி”- ராகுல் காந்தி பேட்டி!
அதன் பின்னர் 1989- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து மற்ற கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியத்தைக் கொடுத்தது.
1994- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனதா தளம் கட்சியும், 1999- ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வெற்றிப் பெற்று மாறி மாறி ஆட்சி அமைத்தனர்.
2004- ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பா.ஜ.க. உடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

2008- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க.வும், 2013- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 2018- ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. பின்னர், எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவியதால் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது.
கர்நாடகா மாநிலத்தில் அதிக முறை ஆட்சி செய்த கட்சி காங்கிரஸ். சுமார் 6 முறை ஆட்சி செய்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்தும் ஆட்சி நடத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஜனதா கட்சி மிகப்பெரிய கட்சியாகவும், ஆட்சியை அமைத்த கட்சியாகவும் உருவெடுத்த நிலையில், பின்னாளில் ஜனதா தளம் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று பிரிந்து அதன் செல்வாக்கு குறையத் தொடங்கியது.
“ஒருநாள் கூட ஓய்வில்லாமல் உழைத்தேன்”- முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேட்டி!
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களால் உருவாக்கப்பட்டதே ஜனதா கட்சி.
16வது சட்டப்பேரவைத் தேர்தல்:
தற்போது கர்நாடக மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, மே 10- ஆம் தேதி அன்று நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (மே 13) காலை 08.00 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 139 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சித் தனிப்பெரும்பான்மையுடன் கர்நாடகாவில் ஆட்சி அமைக்கவுள்ளது. பா.ஜ.க. 62 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 20 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.