உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும். உலகப் புகழ் பெற்ற சிவதலங்களில் ஒன்றாக இத்தலமானது விளங்குகிறது. இக்கோயிலுக்கு நாள்தோறும் எண்ணற்ற பக்தர்கள் வந்துக் கொண்டே இருப்பாா்கள்.
இந்நிலையில், நேற்று கேதார்நாத் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனா். அவர்கள் மலைப்பாதை வழியாக ஜங்கிள்சாட்டி மலையேற்ற பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென காலை 11:20 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது உருண்டு வந்த பாறைகள், பக்தர்கள், டோலி தூக்குவோர் மீது விழுந்தன. பள்ளத்தாக்கில் விழுந்த பக்தர்களை உடனடியாக மீட்கும் பணியில் உள்ளூர்வாசிகளின் உதவியுடன் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். பள்ளத்தில் விழுந்த ஐந்து பேரும் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.இதில் காஷ்மீரை சேர்ந்த டோலி தூக்கும் தொழிலாளர்கள் நிதின் குமார், சந்திரசேகர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத்தின் பாவ் நகரைச் சேர்ந்த ஆகாஷ் சைத்ரியா என்ற பெண் உட்பட மூவர் காயம் அடைந்தனர். உயிரிழந்தவர்கள் யார்? என்றும், அவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதையும் கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், காவல்துறையினரின் உதவியுடன் மலையேற்ற பாதையில் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
தனியார் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் வசூலை குறைக்க ராமதாஸ் வலியுறுத்தல்…
