தண்ணீர்விட்டான் கிழங்கு இயல்பிலேயே இனிப்புச் சுவையும் குளிர்ச்சி தன்மையும் கொண்டது. இவை உடலை பலமாக்க உதவுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் ஆண்மையை அதிகரிக்க செய்யவும் பயன்படுகிறது.
தண்ணீர்விட்டான் கிழங்கில் சிறிதளவு பால் சேர்த்து அரைத்து காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இதனை தினமும் இருவேளை சாப்பிட்டு வருவதால் நீரிழிவு நோய் குணமடையும்.
தண்ணீர்விட்டான் கிழங்கு பொடியை பாலில் கலந்து குடித்து வருவதனால் உடல் உஷ்ணம் குறையும்.
தண்ணீர் விட்டான் கிழங்குடன் 50 கிராம் சுக்கு, 50 கிராம் மிளகு, 50 கிராம் திப்பிலி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் காயவைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் இந்த பொடியினை தினமும் காலை மாலை என இரண்டு வேளைகள், இரண்டு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர எந்தவிதமான காய்ச்சலாக இருந்தாலும் விரைவில் குணமடையும்.
தண்ணீர்விட்டான் கிழங்கினை எடுத்து அதனை நன்கு கழுவி மேல் தோலை நீக்கி காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியினை இரண்டு கிராம் அளவில் நெய்யில் கலந்து காலை, மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட்டு வரலாம்.
தண்ணீர்விட்டான் கிழங்கை காயவைத்து தூள் செய்து ஒரு தேக்கரண்டி வீதம் பாலில் கலந்து குடித்து வர ஆண்மை பெருகும். இதனை ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்த, நான்கு தேக்கரண்டி அளவில் தண்ணீர் விட்டான் கிழங்கு சாறு எடுத்து அதில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை கலந்து தினமும் மூன்று வேலைகள் சாப்பிட்டு வர வேண்டும். தொடர்ந்து ஐந்து நாட்கள் இதனை சாப்பிட்டு வரலாம்.
இம்முறைகளை எல்லாம் ஒருமுறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.