பிரியாணி இலைகளை நாம் பொதுவாக அசைவ உணவுகள் சமைக்கும் போது பயன்படுத்துவோம். ஆனால் இந்த பிரியாணி இலை உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதாவது சில பிரியாணி இலைகளை 1 முதல் 2 டம்ளர் நீரில் கொதிக்க வைத்து பின் அதனை வடிகட்டி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர உடல் எடை குறைவதை காணலாம். இந்த பிரியாணி இலை நீரை குடிப்பதன் மூலம் ஜீரண சக்தி அதிகமாகி மெட்டபாலிசம் அதிகரிக்கும். பிரியாணி இலை நீரில் கலோரிகள் குறைவாக இருப்பதன் காரணமாக இது பசியை அடக்க உதவுகிறது.
இதன் மூலம் நம் உடல் எடையை விரைவில் குறைக்கலாம். மேலும் இது ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கவும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இது சிறுநீரகப் பிரச்சனைகள் சிறுநீரக கற்களையும் போக்க உதவுகிறது. இந்த பிரியாணி இலை நீரை தொடர்ந்து குடித்து வருவதனால் நேர்மறையான சிந்தனைகள் அதிகமாகும். மன அழுத்தம் குறையும்.
அடுத்தது இந்த பிரியாணி இலை நீர் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் தன்மையையும் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் பிரியாணி இலையில் தேநீர் செய்து குடித்து வர நல்ல ரிசல்ட் கிடைக்கும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
- Advertisement -