spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் இதை பின்பற்றுங்கள்!

உங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் இதை பின்பற்றுங்கள்!

-

- Advertisement -

உங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் இதை பின்பற்றுங்கள்!தமிழ் சிலருக்கு இளமையிலேயே சருமம் சுருக்கத்துடன் தோற்றமளிக்கும். இதனை ஆரம்பத்திலேயே தடுக்க நான்கு ஸ்பூன் சிவப்பு சந்தன பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் இரண்டு ஸ்பூன் சீமை சாமந்தி டீ சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சுருக்கங்கள் இருக்கும் பகுதிகளில் தடவி ஊற வைத்து கழுவி வர சுருக்கங்கள் மறையும்.

வறண்ட சருமம் பொலிவு பெற பப்பாளி கூழ் ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் அளவு தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.உங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் இதை பின்பற்றுங்கள்!

we-r-hiring

கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளை சம அளவு எடுத்து அதனை அரைத்து பின் அதில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர முகத்தில் வழிகின்ற எண்ணெய் பசை சரியாகும்.

பாலாடை அல்லது தயிருடன் சிறிதளவு தேன் கலந்து கருவளையம் உள்ள பகுதிகளில் தடவி ஊறவைத்து கழுவி வர கருவளையம் விரைவில் மறையும்.உங்கள் சருமத்தை பாதுகாக்க தினமும் இதை பின்பற்றுங்கள்!

ஓட்ஸ் மற்றும் பாதாம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர சருமம் பளபளப்பாக மாறும்.

கேரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து அத்துடன் சிறிதளவு பாசிப்பயறு மாவு கலந்து முகத்தில் தேய்த்து வர பருக்கள் மறையும்.

இம்முறைகளை ஒரு முறை பயன்படுத்தி பார்த்துவிட்டு எந்த வித ஒவ்வாமையும் ஏற்படவில்லை என்றால் தேவைப்படும் சமயங்களில் பயன்படுத்தலாம்.

MUST READ