கரும்புச்சாறு கேரட் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
கரும்புச்சாறு – ஒரு கப்
கேரட் – 2
ஏலக்காய் – 3
நெய் – சிறிதளவு
பாதாம் – 10
முந்திரி பருப்பு – 10
பிஸ்தா – 10
டூட்டி ஃபுருட்டி – சிறிதளவு
செய்முறை
கரும்புச்சாறு கேரட் அல்வா செய்ய முதலில் கேரட்டை துருவி வைத்துக்கொள்ள வேண்டும். அதேசமயம் ஏலக்காயை தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகிய நட்ஸ் வகைகளை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு கடாயில் நெய் சேர்த்து சூடானதும் துருவி வைத்திருக்கும் கேரட்டை போட்டு பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பினை மிதமான தீயில் வைத்து கரும்புச்சாறு ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து கிளற வேண்டும். இந்த கலவை நன்கு சுருண்டு வரும் வரை வேக வைக்க வேண்டும்.
கலவையானது நன்கு வெந்த பிறகு பொடிப்பொடியாக நறுக்கி வைத்திருக்கும் நட்ஸ் வகைகளை தூவி கிளறி விட வேண்டும். பின்னர் பரிமாறும் போது டூட்டி டூட்டி தூவி பரிமாறலாம்.
தேவைப்பட்டால் நட்ஸ் வகைகளை சிறிதளவு நெய் சேர்த்து வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
இப்போது அருமையான கரும்புச்சாறு கேரட் அல்வா தயார். இதை நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள்.